Jan 21, 2010

'கிரீன் ஹண்ட்' - எதிர்ப்பியக்க கருத்தரங்கம்!


பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!


கருத்தரங்கம்

நாள்: 23.01.2010
நேரம்: மாலை 4 மணி

இடம்:சைதை வர்த்தகசபை,
(சைதை காவல் நிலையம் பின் புறம்)
சைதாப்பேட்டை, சென்னை.

தலைமை:தோழர் வெங்கடேசன்
செயலர். ம.க.இ.க, சென்னை

உரையாற்றுவோர்:

திரு.எஸ்.எஸ். ராஜகோபாலன்
கல்வியியலாளர், சென்னை.

திரு.அரங்க.சம்பத்குமார்
வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

திரு.த.வெள்ளையன்
தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

தோழர் வெ.பழனிநாதன்
மாநில இணைச்செயலர்,
பு.ஜ.தொ.மு

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி
நடைபெறும்.

அனைவரும் வருக‌
-
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
-
தொடர்பு கொள்ள:

ம.க.இ.க : 94446 48879
பு.மா.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952.

Dec 15, 2009

நானும் நீயும்!


நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலோழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப்பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.

- ஜெயபாஸ்கரன்

குறிப்பு : ஆனந்த விகடன் (20/05/2001)ல் வெளிவந்த இந்த கவிதை பிடித்து.. ஜெயபாஸ்கரனின் கவிதை தொகுப்பை வாங்கி ஆர்வமாய் படித்தேன். மற்ற கவிதைகள் வழா வழா!. இந்த ஒரு கவிதை மட்டும் தான் எனக்கு பிடித்திருந்தது.