மே தின பேரணிக்கு போய் திரும்பும் வழியில் ஆறாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணிடம் பேசிக்கொண்டே வந்தேன்.
நாம் போராடி நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து... நீ முக்கிய பொறுப்புக்கு வந்தால்.. முதலில் என்ன செய்வாய்?
"பிச்சைகாரர்களுக்கு எல்லாம் வேலை கொடுப்பேன்!"
இதை தொடரலாமே என கேட்க துவங்கினேன்.
#மாணவர்களுக்கு?"
"எல்லோருக்கும் இலவச கல்வி கொடுப்பேன்"
"படிக்காத பசங்கள பார்த்திருக்கிறாயா?"
"இங்க பார்த்ததில்லை. கிராமத்தில் படிக்காம இருப்பாங்கல்ல! எல்லோரும் படிக்கனும்ல!"
#பெண்களுக்கு?"
"எல்லா இடத்திலும் சுத்தமான கழிவறைகள் கட்டுவேன்"
#விவசாயிகளுக்கு?"
"எங்கு எங்கு எவ்வளவு விளைவிக்க வேண்டுமென திட்டத்தை கொடுப்பேன்"
#குழந்தைகளுக்கு?"
"எல்லா குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பேன்"
(பா. ஜனதா ஆட்சியை நன்றாக புரிந்திருக்கிறாள்!)
#இளைஞர்களுக்கு?"
"எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்"
#மீனவர்களுக்கு?"
"மீனவர்களுக்கு உரிய நேரத்தில் வானிலை தகவல் தருவேன்"
(ஒக்கி புயல் பாதிப்பு!)
திடீரென கொஞ்சம் நிறுத்தி....
"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"
- என்றாள் ஆச்சர்யமாய்!
பிறகு நான் கேட்பதை நிறுத்திவிட்டேன்.
"எல்லோருக்கும் இலவசமா மருத்துவம் கொடுக்கனும்!"
"வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டித்தரனும்!"
இன்னும் சொல்லிக்கொண்டே வந்தாள்!
அது முடிகிற பட்டியலா அது?
#நீ சீக்கிரம் வளர்ந்து களத்துக்கு வா தாயி!
May 3, 2018
Feb 20, 2018
பிச்சைக்காரர்
சென்னை
மாநகராட்சியின்
எல்லையில் உள்ளது
எங்கள்
நகர்.
பத்து
ஆண்டுகளுக்கு முன்பு
அது
ஒரு
எளிமையான
கெங்கை
அம்மன்
கோவில்!
பக்தர்களிடம் வசூல்
செய்து
உட்புறத்தில்
முருகன், பிள்ளையார் அவதரித்தனர்!
பிரார்த்தனை செய்பவர்கள் அதிகரித்ததும்
அய்யர்
தோன்றினார்.
இன்னும் அதிகமானதும்
இன்னொரு அய்யரும் ஐக்கியமானார்.
கடவுள்
நம்பிக்கையுள்ள
என்
அத்தையிடம்
புதிதாய் விரதநாட்கள் முளைத்தன!
பிரதோஷம், கிருத்திகை என
சிறப்பு பூஜைகள்
தவறாமல் நடைபெற்றன!
மார்கழி முழுவதும்
காலையில் பக்தி பாடல்கள் ஒலித்தன!
கடவுளுக்கு
அசையும் சொத்துக்கள்,
அசையா
சொத்துக்கள் அதிகமானதும்
பதினைந்து அடிக்கு சுற்றுப்புற சுவர்
எழும்பியது!
நல்ல
கனமான
இரும்பு கேட்
வந்தது!
பெரிதாய் பூட்டும் தோன்றியது!
பூக்கடை வந்தது!
விபூதி,
குங்குமம்,
பூஜை
பொருட்கள் விற்க
கடையும் வந்து சேர்ந்தது!
அன்னதானம் போடும்
பொழுது
பக்தர்கள் அலைமோதினார்கள்.
எல்லாம் இருந்தாலும்
ஏதோ
ஒன்று
குறைவது போல
மனதில்
தோன்றிக்கொண்டே இருந்தது!
இன்று
வெள்ளிக்கிழமை.
வாசலில் செருப்புகள்
நிறைய
இருந்தன.
தை
மாத
குளிரில்
கண்கள்
உள்ளடங்கி
ஒரு
வயதானவர்
பக்தர்களிடம் இரஞ்சி
கொண்டிருந்தார்.
'முழுமை' பெற்றது போல
இருந்தது
கோவில்!
படம்
உபயம்
: இணையம்
Subscribe to:
Posts (Atom)

