Nov 25, 2015

அப்போ வக்கீல்னா எது வேணா செய்யலாமா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 6

 அப்போ வக்கீல்னா எது வேணா செய்யலாமா? ‘ஒன்வே’ யில் போகலாம். ‘நோ பார்க்கிங்’ கில் நிறுத்தலாம். ஹெல்மெட் போடாமல் போகலாம். அவுங்க மேல நடவடிக்கை எடுக்க கூடாது அப்படித்தானே?

இது வழக்கறிஞர்களைப் பற்றி ஊடங்களில் வேண்டுமென்றே செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம். மதுரை வக்கீல்கள் தலைக்கவசம் போடாமல் சென்றதை ஒரு போராட்டமாகத்தான செய்தார்கள். ”வக்கீல்கள் ஹெல்மெட் போட வேண்டியதில்லை. நாங்கள் கேட்க மாட்டோம். போராட்டத்தை கைவிடுங்கள்” என்று மதுரை காவல்துறை அதிகாரிகள் கூறினர். “ இது மக்கள் பிரச்சினை என்ற அடிப்படையில்தான் போராடுகிறோமேயன்றி எங்களுக்கு சிறப்பு சலுகை கோருவதற்காக அல்ல” என்று கூறி மதுரை வழக்கறிஞர்கள் இதனை நிராகரித்து விட்டனர். இது நடந்த உண்மை.

“அட்வகேட்” என்று வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அடாவடித்தனம் செய்பவர்களே இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறார்கள். அத்தகையோர் எல்லாப் பிரிவினர் மத்தியிலும்தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும்.

ஆனால் போராட்டம் வேறு, அதிகார துஷ்பிரயோகம் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக்கும் விசமத்தனமான பிரச்சாரத்தை ஊடகங்கள் செய்கின்றன. “காவல் துறை, தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, இந்தியன் ஆர்மி” என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு அதிகார வர்க்கத்தினர் அடாவடி செய்வதும், அரசு வாகனங்களை தம் குடும்ப வாகனமாகப் பயன்படுத்துவதும் அன்றாடம் நடக்கும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்கள்.

உரிமைகளுக்குப் போராடும் வழக்கறிஞர்கள் ஒரு போதும் இத்தகைய முறைகேடுகளிலோ, காலித்தனங்களிலோ ஈடுபடுவதில்லை. உண்மையில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் போலீசுடன் அங்காளி பங்காளியாக இருக்கும் வழக்கறிஞர்கள்தான். அத்தகையவர்களைப் பற்றி போலீசு ஒருபோதும் புகார் சொல்வதில்லை.

 - ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....

Nov 24, 2015

ம.க.இ.கவின் அனைத்து பாடல்களும் அடங்கிய புதிய டிவிடி!

அசுரர்களின் குரல் கோவனுடையது....

புரட்சிகரப் பாடகர் கோவன் இதுவரை பாடிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து இரு குறுந்தகடுகளாக வெளியிட்டிருக்கிது மக்கள் கலை இலக்கியக் கழகம். ‘அசுரகானம்’ என்னும் தலைப்பில் ஒரு தகடும், ‘ஊருக்கு ஊரு சாராயம்’ என்னும் தலைப்பில் இன்னொரு தகடுமாக வந்திருக்கிறது.

’இருண்ட காலம்’ ‘அசுரகானம்’ ’ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா?’ ’அடிமை சாசனம்’ ‘காவி இருள்’ என கடந்த கால் நூற்றாண்டுகால அரசியல், சமூக நிகழ்வுகளை ஒரு இயக்கமும், அதன் தெருப்பாடகனும் எப்படிக் கடந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த தொகுப்புகள் உதவும்...இசையை, மக்களை, அரசியலை நேசிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாங்க வேண்டிய தொகுப்புகள்....

வெளியீடு -
 மக்கள் கலை இலக்கியக் கழகம்,

தொடர்புக்கு :

கண்ணையன் ராமதாஸ்,
16,முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,அசோக் நகர், சென்னை -600083.
தொலைபேசி - 9941175876,
email - pukatn@gmail.com.