Jan 10, 2014

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!

கண்டன ஆர்ப்பாட்டம்!

இடியாய் இறங்குகிறது
பெட்ரோல், கேஸ், பால்விலை உயர்வு!
இனியும் பொறுப்பது நமக்கு இழிவு!

தலைமை :
தோழர் சித்ரா, செயற்குழு உறுப்பினர்,

சிறப்புரை:

தோழர் ஆ. முகுந்தன், தலைவர்,
பு.ஜ.தொ.மு

நாள் : 11/01/2014

மாலை 5 மணி

இடம் : பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு!
மக்கள் கழுத்தில் சுருக்குக்கயிறு!

சமையல் எரிவாயு விலை உயர்வு!
கேட்டாலே பற்றி எரியுது மக்கள் வயிறு!

பால் விலை பலமடங்கு உயர்வு!
பச்சிளம் குழந்தைகள் பட்டினியாகுது!

விசம்போல் உயரும் விலைவாசி உயர்வுக்கு
தனியாமயமே காரணம் பாரு!

அம்பானி கும்பலின் கல்லா நிரப்ப
கிருஷ்ணா - கோதாவரி எண்ணெய்ப்படுக்கை!

சர்வதேச சந்தை விலையைக் காட்டி
எரிபொருட்களின் விலையைக் கூட்டி
அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும்
மத்திய - மாநில அரசுகளின்
மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!

பால்விலையை உயர்த்தி பச்சிளங் குழந்தைகளை
பட்டினியில் தள்ளுது பாசிச ஜெயா!
ரிலையன்ஸ் அம்பானியின் கொள்ளைக்கு
கிருஷ்ணா - கோதாவரி எண்ணெய்ப்படுக்கை!

இயற்கை எரிவாயுவை தானம் செய்த
காங்கிரசு - பி.ஜே.பி கும்பலை
மக்கள் மத்தியில் தோலுரிப்போம்!

உழைக்கும் மக்களை கண்காணிக்கும்
கைரேகை, கண்விழி பதிவு செய்யும்
ஆதார் அடையாள அட்டையைப் புறக்கணிப்போம்!

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு பிறகும்
ஆதார் அடையாள அட்டையை
வலியுறுத்தும் எண்ணெய் நிறுவனங்களின்
மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம்!

பெட்ரோல், கேஸ், பால்விலை உயர்வு
மக்கள் மீதான தாக்குதலே!

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கின்ற
மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!