Dec 15, 2009

நானும் நீயும்!


நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலோழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப்பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.

- ஜெயபாஸ்கரன்

குறிப்பு : ஆனந்த விகடன் (20/05/2001)ல் வெளிவந்த இந்த கவிதை பிடித்து.. ஜெயபாஸ்கரனின் கவிதை தொகுப்பை வாங்கி ஆர்வமாய் படித்தேன். மற்ற கவிதைகள் வழா வழா!. இந்த ஒரு கவிதை மட்டும் தான் எனக்கு பிடித்திருந்தது.