Mar 27, 2009

ஈழம் - பொதுக்கூட்டம் -அருந்ததிராய் சென்னையில் பேசுகிறார்!

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மயிலையில் நடத்திய பொதுக்கூட்டத்தின் பொழுது, ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்து கொண்டிருந்தார்கள்.

'இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு' ஒன்று

இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்த... எனும் தலைப்பில்

கண்டனப் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

நாள் : 30/03/2009

நேரம் : மாலை 5.30 மணி

இடம் : திறந்த வெளி அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை

கண்டன உரை

தலைமை : பேரா. அ. மார்க்ஸ்

உரைவீச்சு :

அருந்ததிராய் - எழுத்தாளர்

சிறிதுங்க ஜெயசூர்யா, பொ.செ.
ஐக்கிய சோசலிச கட்சி, இலங்கை

சத்திய சிவராமன்,
பத்த்ரிக்கையாளர் டெல்லி

மற்றும் சிலர்.

மேற்கொண்டு ஏதும் விவரம் தெரிய வேண்டுமாயின், கீழ்கண்ட தொலைபேசி எண்-ஐ தொடர்புகொள்ளுங்கள். (அந்த பிரசுரத்திலேயே இருந்தது)

9444120582

Mar 20, 2009

பொதுக்கூட்டம் - அறிவிப்பு!

அன்பார்ந்த பதிவர்களே!

உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல்துறையின் வெறிகொண்ட தாக்குதலுக்கு பிறகு, வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தை நசுக்க அரசும், பல பார்ப்பன பத்திரிக்கைகளும் வழக்கறிஞர்களை பொதுமக்கள் மத்தியில் வில்லனாக்க முயற்சி செய்தன. இந்த போராட்டத்தை ஆதரிக்கும் நாம், இந்த போராட்டத்தின் அவசியம், காவல்துறையின் அட்டூழியத்தையும் மக்களிடத்தில் அம்பலப்படுத்த பொதுக்கூட்டம் நடத்த 10.03.2009 அன்று அனுமதி கேட்டால், தேர்தலை காரணம் காட்டி அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டது.

நீதிமன்றத்திலும் அனுமதி வாங்க முடியாத நிலை. பிறகு, இந்த அனுமதி மறுத்ததை புரட்சிகர அமைப்புகள் சுவரொட்டி மூலம், அம்பலப்படுத்திய பிறகு, மீண்டும் அனுமதி தர முன்வந்தார்கள். பிறகு, மீண்டும் மனது மாறி மறுத்துவிட்டார்கள். ஜனநாயக முறைப்படி ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையின் "மூடு" தான் தீர்மானிக்கிறது.

இப்பொழுது, மீண்டும் அனுமதி தந்திருக்கிறார்கள். இறுதி நேரத்திலும் ஏதாவது அனுமதி மறுக்கலாம். நமக்கு போராட்டம் தவிர, வேறு குறுக்குவழிகள் இல்லை.

போராடுவோம்!


பொதுக்கூட்டம்

நாள் : 25.03.2009 (புதன்கிழமை)

நேரம் : மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்

தலைமை :

தோழர் அ.முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை :


தோழர் மருதையன், பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.

உரையாற்றுவோர் :

தோழர் பி. திருமலைராசன்,
முன்னாள் தலைவர்,
கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கக்கூட்டமைப்பு,
தமிழ்நாடு-புதுச்சேரி

தோழர் சி. ராஜு,
ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

தோழர் ஆர். சங்கரசுப்பு,
தலைவர்,
அனைத்திந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்


புரட்சிகர கலை நிகழ்ச்சி :


மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

பின்குறிப்பு : இதில் கடைசி நேர மாறுதல் ஏதும் மாற்றம் இருப்பின் வினவு தளத்தில் வெளியாகலாம்.

Mar 9, 2009

பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு அறிவிப்பு


அன்பார்ந்த பதிவர்களே!

இன்று நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. உயர்நீதி மன்றத்தில் அனுமதி வாங்க முயற்சி நடைபெறுகிறது.

ஆகையால், இன்றைக்கு நடக்க இருந்த பொதுக்கூட்டம் பிறிதொரு நாளில் நடத்தப்படும். இது தொடர்பான விரிவான செய்திகள் வினவு தளத்தில் இன்று வெளியாகலாம். பார்த்துக்கொள்ளுங்கள்.

****


இது போலீஸ் - வக்கீல் பிரச்சனை அல்ல!
போராடும் மக்கள் அனைவரின் பிரச்சனை!

உயர்நீதிமன்றத் தாக்குதல்:
வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரித்து...

பொதுக்கூட்டம் நாள் : 10.03.2009 (செவ்வாய்க்கிழமை)

நேரம் : மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்

தலைமை : தோழர் அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை : தோழர் மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்

புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விடுதலை முன்னணி, சென்னை.

Mar 6, 2009

மகளிர் தினம் - அரங்கக் கூட்டம்!



மகளிர் தினம் - மார்ச் 8, 2009 - அரங்க கூட்டம்

உழைக்கும் பெண்களாய் ஒன்றிணைவோம்!

சிதைந்து வரும் நம் வாழ்வைச் சீரமைப்போம்!

சர்வதேச மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!



நாள் :

மார்ச் 8 - மாலை 3 மணி,

இடம் :

துர்கா நகர்,
செல்லியம்மன் (கோவில் அருகே),
குரோம்பேட்டை, சென்னை

தலைமை :

தோழர் உஷா,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை


சிறப்புரை :

தோழர் துரை சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம், சென்னை.

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே!

மார்ச் 8 என்றாலே மகளிர் தினம், வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் இந்த தினத்தைப் பற்றி மெத்த படித்த மேதாவிகள், மேட்டுக்குடி சீமாட்டிகள், அரசு மற்றும் முதலாளித்துவ நிறுவனங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள்.

அதையும், அதன் (சர்வதேச மகளிர் தினத்தின்) உண்மையான அர்த்தத்தில் தெரிந்து வைத்திருப்பார்களாயென்று தெரியாது. அதிலும் அன்றாடம் உழைத்து, உழைத்து வாழ்வை சிதைத்துக் கொண்டுவரும் எழுத படிக்கத் தெரியாத மற்றும் ஓரளவு படிக்கத் தெரிந்த உழைக்கும் பென்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடுமையான போராட்டங்களை விடாப்பிடியாக, தொடர்ச்சியாக நடத்தி பெண்களுக்கான வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை போன்ற ஜனநாயக உரிமைகளைச் சாதித்துக் கொடுத்த தினம் தான் சர்வதேச மகளிர் தினம்.

இப்படிப்பட்ட தினத்தை இன்று தொண்டு நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும், பிழைப்புவாதச் சங்கங்களும், அரசு நிறுவனங்களும் அவரவர் தகுதிக்கேற்ப ஆபாசக் கூத்துக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தி அரட்டை அடிக்கும் தினமாக மாற்றி வருகின்றன. இதன் மூலம், அதன் போர்க்குணத்தையும் தியாகத்தையும் இழிவுப்படுத்தி வருகின்றன.

சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓ.க்கள், சமூக நல மன்றங்கள் அனனத்தும் அரசு அறிவிக்கும் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் உரிமைகளைப் பெற்றுவிடமுடியும் என்ற மாயையை உழைக்கும் பெண்களிடம் உருவாக்கி, அவர்களின் போராட்ட உணர்வையும் முடக்கி வருகின்றன. மேலும், உழைக்கும் பெண்களின் வறுமையை பயன்படுத்தி அரசு வங்கிகளில் கடன் வாங்கிக் கொடுத்து நிரந்தர கடனாளியாக்கி உரிமைக்காகப் போராடும் வர்க்க உணர்வுகளையும் அடக்கிவிடுகின்றன.

இவைகள் உருவாக்கி வரும் இழிவுகளை, சதிகளை முறியடிக்க, 8 மணி நேரம் உழைப்புக்கான உரிமைப் போரில் பெண்களின் முன்னோடியாகத் திகழ்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி பயணத்தை தொடருவோம்.

இந்தப் பயணம் வாக்களிப்பதற்கோ, விரலில் மை வைத்துக் கொள்வதற்கோ, வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதற்கோ அல்ல. பெண்களின் மீதான பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, உழைப்புச் சுரண்டல் போன்ற எண்ணற்றக் கொடுமைகளுக்கு சவக்குழி அமைக்கும் போராட்டப் பயணமாக மாற்றியமைப்போம்.

மேலும், சர்வதேச மகளிர் தினத்தை, உலக உழைக்கும் பெண்கள் தினமாக வளர்த்தெடுக்கவும், உழைக்கும் மக்களின் விடுதலையே பெண்களின் உண்மையான விடுதலை என்பதை வார்த்தெடுக்கவும் உறுதியேற்போம்.

இதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது என்னவெனில், நம்மை முடக்கி வரும் பல்வேறு மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவதே.

பிறந்ததில் இருந்தே வாழ்வின் பெரும் பகுதியை குடும்பத்திற்காக உழைத்த நாம், சற்று, நம்மை போன்ற உழைக்கும் பெண்களுக்காக உழைக்க முன்வருவோம். சிதைந்து வரும் நம் வாழ்வைச் சீரமைப்போம். படிப்படியாக சமூக மாற்றத்தை நிகழ்த்தவும் இதர உழைக்கும் வர்க்கத்தோடு அணிவகுப்போம்.

அழகுப் பதுமைகளாக வலம் வருவதை வக்கிரமென ஒதுக்குவோம்!

• போராளிகளாகக் களம் இறங்குவதை கெளவரமாக கருதுவோம்!

• சாதி – மத வேற்றுமைகளை களைந்து வர்க்கமாக ஒன்றிணைவோம்!

• பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!

• பணி இடங்களில் இழிவாக நடத்தப்படுவதை முறியடிப்போம்!

• இரவு நேரப் பணிகளே பெண்களுக்கு இல்லாமல் செய்வோம்!
-

- பெண்கள் விடுதலை முன்னணி,

தொடர்புக்கு :

தோழர் உஷா,
எண் : 29, இந்திரா நகர் 16 வது குறுக்குத் தெரு,
குரோம்பேட்டை, சென்னை - 44
பேச : 98849 50952

Mar 5, 2009

உயர்நீதிமன்றத் தாக்குதல் - பொதுக்கூட்டம்!


அன்பார்ந்த பதிவர்களே!

இது போலீஸ் - வக்கீல் பிரச்சனை அல்ல!
போராடும் மக்கள் அனைவரின் பிரச்சனை
!

உயர்நீதிமன்றத் தாக்குதல்:
வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரித்து...


பொதுக்கூட்டம்

நாள் : 10.03.2009 (செவ்வாய்க்கிழமை)

நேரம் : மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்

தலைமை :

தோழர் அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை :


தோழர் மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்

புரட்சிகர கலை நிகழ்ச்சி

மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

நன்றி : வினவு

(வெறிநாய் போலீஸ் படத்திற்காக)