Mar 9, 2009

பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு அறிவிப்பு


அன்பார்ந்த பதிவர்களே!

இன்று நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. உயர்நீதி மன்றத்தில் அனுமதி வாங்க முயற்சி நடைபெறுகிறது.

ஆகையால், இன்றைக்கு நடக்க இருந்த பொதுக்கூட்டம் பிறிதொரு நாளில் நடத்தப்படும். இது தொடர்பான விரிவான செய்திகள் வினவு தளத்தில் இன்று வெளியாகலாம். பார்த்துக்கொள்ளுங்கள்.

****


இது போலீஸ் - வக்கீல் பிரச்சனை அல்ல!
போராடும் மக்கள் அனைவரின் பிரச்சனை!

உயர்நீதிமன்றத் தாக்குதல்:
வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரித்து...

பொதுக்கூட்டம் நாள் : 10.03.2009 (செவ்வாய்க்கிழமை)

நேரம் : மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்

தலைமை : தோழர் அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை : தோழர் மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்

புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விடுதலை முன்னணி, சென்னை.

4 comments:

Anonymous said...

test

Anonymous said...

தமிழகம் முழுவதும் லாயர்களை வேலை நிறுத்தம் செய்யச் சொல்லி விட்டு, தாங்கள் மட்டும் பொதுக்கூட்டத்திற்கான அனுமதி வேண்டி கோர்டில் மனுபோடுவது எந்தவிதத்தில் நியாயம்! அதற்கு பதில் கூட்டம் நடத்தி கைதாகி சிறைக்குச் சென்று தியாகி பட்டம் பெறலாமே! நல்ல சந்தர்ப்பவாதம்.

Anonymous said...

அறிவிப்புக்கு நன்றி.

அமிர்தா said...

//தமிழகம் முழுவதும் லாயர்களை வேலை நிறுத்தம் செய்யச் சொல்லி விட்டு, தாங்கள் மட்டும் பொதுக்கூட்டத்திற்கான அனுமதி வேண்டி கோர்டில் மனுபோடுவது எந்தவிதத்தில் நியாயம்! அதற்கு பதில் கூட்டம் நடத்தி கைதாகி சிறைக்குச் சென்று தியாகி பட்டம் பெறலாமே! நல்ல சந்தர்ப்பவாதம்//

அய்யா நந்தன் அவர்களே!

தமிழகம் முழுவதும் லாயர்களை வேலை நிறுத்தம் செய்ய சொல்லி, மனித உரிமை பாதுகாப்பு மையம் சொல்லியதா? என்ன சொல்கிறீர்கள்?

பெரும்பான்மை வழக்கறிஞர்கள் தங்களுடைய அமைப்பு சார்பில் நடத்துகிற போராட்டம் அது. அதில், மனித உரிமை பாதுகாப்பு மையமும் ஒன்று. அவ்வளவு தான்.

இந்த பதில் சொல்கிற பொழுது, ஈழத்திற்காகவும், வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரித்தும், தமிழகம் தழுவிய அளவில், பகுதி பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ம.க.இ.கவும் அதன் சகோதர அமைப்புகள் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்றன.

அதன் தொடர்ச்சியில் தான், சென்னையிலும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தியாகி பட்டம் பல ஆண்டுகளாக, போராடி, சிறை சென்று தோழர்கள் வாங்கி கொண்டே தான் இருக்கிறார்கள்.

உங்களுக்கு யார் மீது, எதன் மீது கோபம் நந்தன்?