Jun 18, 2016

எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள் கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்?


நீதிபதிகளே 'தவறிழைக்கிற' வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்ற புதிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தமிழகம் தழுவிய அளவில் பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என‌ போராடி வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் இதுவரை ஈழப்பிரச்சனை, மாணவர்கள் பிரச்சனை, மீனவர் பிரச்சனை என பல பிரச்சனைகளிலும் தலையிட்டு, போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பொதுமக்களில் உள்ள பல்வேறு வகையினர் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தானே தார்மீக கடமை!

இதுசம்பந்தமாக கார்ட்டூனிஸ்ட் பாலா போராடும் வழக்கறிஞர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஆதரவு தெரிவித்து சென்னை முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டியிருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிஐ எம்.எல். கட்சியின் தொழிற்சங்க அமைப்பு போராட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் செய்ததை பார்க்கமுடிந்தது!

வழக்கறிஞர்களின் இன்றைய போராட்டம். அவர்களின் தொழிற்சார்ந்தது மட்டுமல்ல! பெரும்பான்மையான வழக்காடிகளும், மக்களும் பாதிக்கப்படக்கூடிய விசயம். ஆகையால், வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரியுங்கள்! அல்லது உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அமைதியாக இருப்பது மிகவும் அநியாயம்!

- செல்வம்

No comments: