Sep 14, 2007

கலைஞர் டிவி - ஆரம்பமே 'அசத்தலா' இருக்கே!




நாளை முதல், இந்திய சானல்களில் (பில்டப் அதிகமா இருக்கோ!) தமிழ்சானல் ஒன்று ஆர்ப்பாட்டமாய் தன் ஒளிபரப்பைத் தொடங்க இருக்கிறது.

காலை முதல் இரவு வரைக்கும் திரை நட்சத்திரங்கள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்த நேரங்களை, நம்மோடு பகிர்ந்து கொள்ள இருப்பதை, இன்றைக்கே டிரைலர் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாளை முதல், தமிழனின் வாழ்வு ஒருபடி உயரப்போகிறது(!).

திராவிட வெகுஜனக் கட்சிகளில், திமுகவின் தலைவர் கலைஞர் தான், இன்றைக்கும் அவ்வப்பொழுது பகுத்தறிவு பேசி, இந்துத்துவ ஆட்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறார். இது நாடறியும்.

ஆனால், அப்படிப்பட்ட கலைஞரின் பெயரில், தொடங்குகிற சானலை, இரண்டு நாட்களுக்கு முன்பாக அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கியிருக்கலாம். அல்லது, இன்னும் மூன்று நாளில், செம்டம்பர் 17 ந்தேதியன்று பெரியாரின் பிறந்த நாள் வருகிறது அன்றைக்கு தொடங்கியிருக்கலாம்.

இப்படிப்பட்ட சிறப்பான நாட்களை விட்டு விட்டு, ஏன் விநாயகர் சதுர்த்தியன்று தொடங்குகிறார்கள்?

கலைஞருக்கு பிடிக்காத நபர் யாராவது இப்படி இந்த நாளில், சானல் தொடங்குவதைப் பற்றி, கேள்வி கேட்டிருந்தால், கலைஞர் என்ன பதில் சொல்லியிருப்பார்.

"ஒரு தடவை சிவபெருமான் கையாலயத்தில் தியானத்தில் ஆழ்ந்துவிட, தனிமையில் விடப்பட்ட பார்வதி தன் மீது அன்பு செலுத்தவும் தன்னை பாதுகாக்கவும் வேண்டி தன் உடல் அழுக்கை உருட்டி இளைஞன் ஒருவனை உருவாக்கினாள். அவனைக் காவலாளாக நியமித்து யாரையும் அனுமதிக்க வேண்டாமென்று கட்டளையிட்டு, குளிக்க செல்கிறாள்.

இதற்கிடையில், சிவன் தியானத்திலிருந்து விடுபட்டு, பார்வதியின் அந்தப்புரத்திற்குள் சிவன் நுழைய, காவலுக்கு நின்ற அவன் அனுமதி மறுக்க, சிவன் கோபப்பட்டு, தலையை வெட்டிவிடுகிறார். பிறகு, அழுது வடிந்த பார்வதியை சமாதனப்படுத்த, வடதிசையில் கண்ணில்பட்ட ஒரு யானையின் தலையை வெட்டி வந்து ஒட்ட வைக்கிறார்கள். இப்படித்தான், யானை முகம் கொண்ட விநாயகர் தோன்றினார்".

இதிலிருந்து நாம் பெறுகிற செய்தியாவது, அழுக்கில் உருவானவர் விநாயகர். இந்த நாளில் தொடங்கப்படுகிற சானலின் தரமும் இப்படி அழுக்காகத்தான் இருக்கும்"


இது சிரிப்பதற்காக, சொல்கிற செய்தி அல்ல! திமுகவின் கொள்கைகளும், இந்துத்துவ கொள்கைகளும் இருவேறு துருவங்கள் என்று நினைப்பவர்கள், இப்படி இரண்டும் இணைகிற இந்த புள்ளியைப் பார்த்தாவது, புரிந்து கொண்டால் சரி.

திமுகவில் இருக்கும் பலரிடம் இந்துத்துவ கருத்தியல் நன்றாகவே இருக்கிறது. அதிமுகவுக்கும், திமுகவிற்கும் சிலர் அடிக்கடி கட்சி மாறுகிறார்களே! நாளை, பி.ஜே.பி.க்கும் கூட எந்தவித உறுத்தலும் இல்லாமலும், இயல்பாய் இவர்கள் மாறுவார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் - முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்றைய பாரதிய ஜனதாவில் இருக்கும் திருநாவுக்கரசு.

from socratesjr2007.blogspot.com

11 comments:

Anonymous said...

இந்துத்துவவாதிகள், பிள்ளையாரை வைத்து, இந்தியா முழுக்க கலவரம் செய்து, தங்கள் இயக்கங்களை கட்டுகிறார்கள். வளர்க்கிறார்கள்.
தமிழகத்திலும், ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் பல்வேறு பகுதிகளில், பதட்டமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும், இவ்வேளையில், விநாயகர் சதுர்த்தியன்று கலைஞர் சானலைத் தொடங்குதல் அபத்தம் தான்.

Anonymous said...

குறைந்த பட்சம் பா.ம.க வின் 'மக்கள் தொலைக்காட்சி தரத்தில் இருக்கும் என எதிர்பார்த்தேன். நிகழ்ச்சிகளில் கூட சன் டிவி vs கலைஞர் டிவி தான்.

Anonymous said...

முதல்ல இதே போல பதிவு குருத்து பேர்ல இருக்கு பாருங்க டி.வி தான் காப்பின்னா இங்கியுமா

Anonymous said...

I think like you. good.

அமிர்தா said...

கவனிச்சு சொன்னதுக்கு நன்றி அனானி.

ஆனால், என் பதிவுக்கு கீழே, அந்த பிளாக்கிலிருந்து எடுக்கப்பட்டதையும் நான் குறிப்பிட்டு இருக்கேன். கொஞ்சம் அதையும் பாருங்க!

Anonymous said...

தமக்குப்பிடித்த ஒரு கொண்டாட்டத்தைக்கூட சுதந்தரமாக நடத்தவியலாமல் கலவரம் செய்கிறார்கள், பதட்ட சூழலை உருவாக்குகிறார்கள் என்றால் அது அப்படி கூறுவோரின் மனோநிலையைத்தான் காட்டுகிறதேயன்றி வேறல்ல.

மற்றபடி, அழுக்கடைவதும், மறுபடி மறுபடி துவைத்து நாளடைவில் கிழிந்து குப்பைக்குப்போவதுமான ஒரு துணியால் தமக்கு அடையாளம் தேடும் பகுத்தறிவுப்பகலவன் அவர்கள் பெயரில் ஆரம்பிக்கப்படும் தொலைக்காட்சி விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பிக்கப்படுவதில் ஒன்றும் ஆச்சரியம் அல்ல.

ஏனெனில் தமிழகத்தில் பகுத்தறிவு என்ற பதத்தின் பொருளும் அது அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியும் எல்லோரும் அறிந்ததே.

அன்புடன்
முத்துக்குமார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது மஞ்சள் துண்டின் மகிமை!

வடுவூர் குமார் said...

இதென்னங்க அனியாயமா இருக்கு?
தலைவருக்கு தான் கடவுள் இல்லை கொள்கை,வேலை செய்பவர்களுக்கு இல்லையே.
பொது மக்களுக்காக படைக்கப்படும் தொலைக்காட்சி சுபயோக சுப தினத்தில் ஆரம்பித்தால் என்ன குறைச்சல்?
:-)))))

✪சிந்தாநதி said...

//கலைஞரின் பெயரில், தொடங்குகிற சானலை, இரண்டு நாட்களுக்கு முன்பாக அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கியிருக்கலாம். அல்லது, இன்னும் மூன்று நாளில், செம்டம்பர் 17 ந்தேதியன்று பெரியாரின் பிறந்த நாள் வருகிறது அன்றைக்கு தொடங்கியிருக்கலாம்.//

அண்ணா பிறந்த நாள் எந்த நாள் என்று சரியாக தேதி பார்த்து சொல்லுங்களேன்.

Unknown said...

மகா அவர்களே!!,

தலைப்பை சிறப்பாக தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். ஒன்றை தாங்கள் அறியவேண்டும். "கலைஞர் டிவி" என்பது கலைஞர் வைத்திருக்கும் சிறு பெட்டிக்கடை அல்ல. பெரிய கம்பெனி. அதில் 80%க்கு மேல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இருப்பார்கள். பெரும் பண முதலீடு செய்தவற்கள் இருப்பாறர்கள். இது அவர்கள் முடிவாக இருக்கும் என்பது என் கருத்து. தாங்கள் கலைஞரும் ஒரு கடவுள் பக்தன் என்று சொல்ல விரும்பினால் உங்கள் விருப்பம். தாங்கள் கலைஞரின் மன்சள் துண்டைப் பற்றி கேட்கலாம். இதெல்லாம் ஒரு அரசியல்வதியின் யுக்திதன்.

கோவி எனும் கோவிந்து.

குருத்து said...

என்னுடைய பதிவை, நீங்களும் எடுத்து போட்டதற்கு நன்றி.

அந்த பதிவில், ஒரு செய்திப்பிழை இருக்கிறது. இந்த பின்னூட்டத்தை உங்கள் பதிவில் வெளியிடுங்கள்.

என் பதில் :

14ந் தேதி பதிவிட்டு, 15ந்தேதி, காலையில் தேதி கிழிக்கும் பொழுது, அண்ணா அருகில், விநாயகரைப் பார்த்ததும், பதறிப்போய்விட்டேன்.

இந்த பதிவில், அண்ணா பிறந்தநாள் இரண்டு நாள்களுக்கு முன்பு என குறிப்பிட்டிருந்தேன். அதற்காக வருந்துகிறேன்.

அந்த செய்தி குழப்பத்திற்கு காரணம், இரண்டு நாள்களுக்கு முன்பாக, கருணாநிதி "சிறுபான்மையினருக்காக இடஒதுக்கீடு அவசரச் சட்டத்தை" அண்ணா பிறந்த நாளில் அறிவிப்பதாய் ஒரு செய்தி வெளிவந்தது.

அண்ணா பிறந்த நாளை உறுதிப்படுத்த, காலண்டரில் தேடினேன். காலண்டரின் பின் அட்டை மதங்களுக்கானதாய் தானே இருக்கிறது.

திமுகவின் வலைத்தளத்தில் தேடினால், வலைத்தளம் கட்டுமானத்தில் இருப்பதாக பார்த்தேன். இப்படி தேடியதில் சில குழப்பங்கள்.

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பதிவிற்கான விவரங்களை தவறாகப் போடுவது, பாரிய தவறு தான்.

இனி, வருங்காலங்களில், தரவுகளை சரிப்பார்த்த பிறகே, பதிவிடுகிறேன்.

ஆனால், இந்த கருத்தில் எனக்கு கருத்து வேறுபாடில்லல.

திமுகவில் இருக்கும் பலரிடம் இந்துத்துவ கருத்தியல் நன்றாகவே இருக்கிறது. அதிமுகவுக்கும், திமுகவிற்கும் சிலர் அடிக்கடி கட்சி மாறுகிறார்களே! நாளை, பி.ஜே.பி.க்கும் கூட எந்தவித உறுத்தலும் இல்லாமலும், இயல்பாய் இவர்கள் மாறுவார்கள். அதற்கு ஒரு நல்ல முன்னுதாரணம் - முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்றைய பாரதிய ஜனதாவில் இருக்கும் திருநாவுக்கரசு.