Jul 10, 2017

அத்தை

அத்தை!

ஒவ்வொரு அத்தைக்கும்
ஒவ்வொரு சிறப்புண்டு!

'என்ன மருமகனே!'
என அழைப்பதில்
அத்தனை அன்பு ததும்பும்!

"எனக்கு ஒரு பொண்ணு இருந்தா
உனக்குத்தாண்டா கட்டிக் குடுத்திருப்பேன்" 
எப்பொழுதும் வாஞ்சையுடன் சொல்வார்
ராக்கு அத்தை!

அத்தைகளின் அன்பை
இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே
எல்லா அத்தைகளின் பெண்களையும் 
கட்டிக்கொள்ளவேண்டும் என 
நினைத்த காலம் உண்டு! 😜

சொந்த ஊர் பாசத்தில்
அத்தைகளின் அளவில்லாத 
அன்பும் உண்டு!

எந்த அத்தை பெண்ணையும் கட்டாமல்
சாதி மறுப்பு திருமணம் செய்த பொழுதும்
வருத்தம் இருந்தாலும்
மாறாத அன்பு காட்டினார்கள்.

பிச்சை அத்தை கோரவிபத்தில் 
இறந்த பொழுது கலங்கிபோனேன்.
கால இடைவெளியில் 

அத்தைகள் மறையும் செய்திகள் 
வந்து கொண்டே இருக்கின்றன!
அத்தைகள் இல்லாத உலகத்தை
நினைத்துப் பார்ப்பது 
சிரமமாய் இருக்கிறது! 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உரிமையுள்ள உண்மையான பாசம்...