Jan 6, 2015

சாருவின் வெளியீட்டு விழாவும், காமராஜர் அரங்க சீட் அளவும்!

சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன். நமக்கும் இலக்கியத்திற்கும் தூரம் தான்! தூரத்தை குறைப்பதற்காக அவ்வப்பொழுது சில கூட்டங்களில் தலை காட்டுவதுண்டு!

அரங்கத்தில் 2000 சீட்களாவது இருக்கும். மொத்த அரங்கத்தில் 60%க்கும் மேலாக சீட்கள் ஆளில்லாமல் இருந்தது. அதுவும், ஹாலின் இடது ஓரத்தில் ஆட்களே இல்லை என்கிற அளவுக்கு இருந்தது. 600, 700 பேருக்கு ஏன் இவ்வளவு பெரிய ஹால்? சாருவின் நண்பர்களும், வாசகர்களும் நிறைய உழைத்து, விளம்பரப்படுத்தியதால், நிறைய பேர் வந்துவிடக்கூடும்  என்ற எதிர்ப்பார்ப்பு இருந்திருக்கலாம் என தோன்றியது!

ஆனால் சாரு இப்படி எழுதுகிறார்.

//நேற்றைய விழா மிக வெற்றிகரமாக முடிந்தது.  வந்திருந்த அனைவருக்கும் நன்றி.  விடுமுறை முடிந்த முதல் நாள் – திங்கள் கிழமை அன்று – 2000 பேர் கொள்ளளவு கொண்ட அரங்கில் 1500 பேர் வந்திருந்தது ஒரு மிகப் பெரிய சாதனை தான்.  ஆனாலும் இனிமேல் காமராஜ் அரங்கம் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  ஏனென்றால், அந்த அரங்கம் இப்படித்தான் ஏதாவது இடக்குமுடக்கான தேதியில் கிடைக்கிறது.  சனி, ஞாயிறு வேண்டும் என்றால் டிசம்பர் விழாவுக்கு பத்து மாதங்கள் முன்னதாக அதாவது மார்ச் மாதமே முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது.  அது நம்மால் ஆகாது என்பதால் இனிமேல் மியூசியம் அரங்கிலேயே வைத்து விடலாம் என்று யோசிக்கிறேன்.//

http://charuonline.com/blog/?p=2137

அரங்கத்தின் சீட் அளவு எவ்வளவு இருக்கும் என இணையத்தில் தேடிப்பார்த்ததில், 1700 தான் என தெரிந்தது!

"Kamaraj Kalai Arangham" 
574 A, Anna Salai 
Opp. DMS 
Teynampet Police Station 
Chennai 600006 
Ph: (044) - 24349040 
Capacity: 1700 
Stage: 45' x 75' 
2 Dressing Rooms 
A/C 

http://www.narthaki.com/spaces/sp1h.htm

சாரு மேடையில் இருந்ததால் ஒளியின் வெளிச்சத்தாலும், அரங்கம் முழுவதும் வாசகர்களை பார்க்கும் ஆர்வத்தாலும் சாருவிற்கு 1500 தெரிந்திருக்கலாம். ஆக, உண்மை தெரிந்த நாம் சாருவிற்கு தெரியப்படுத்தவேண்டும் என்ற நல்லெண்ண‌த்தில் இந்த தகவலை சொல்கிறேன்! கடந்த வெளியீட்டு விழாவிலும் இதே நிலை தான். அப்பொழுதே இந்த தகவலை என்னை மாதிரி யாராவது பொறுப்பாக சொல்லியிருந்தால், காமராஜர் அரங்கத்தை சாரு தவிர்த்திருப்பார். சாருவின் மின்னஞ்சலுக்கும் இந்த தகவலை அனுப்பிவிட்டேன். ஏதோ நம்மால் முடிந்த சிறு உதவி!

குருத்து

4 comments:

சென்னை பித்தன் said...

நல்லதுதான்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//சாருவின் மின்னஞ்சலுக்கும் இந்த தகவலை அனுப்பிவிட்டேன். ஏதோ நம்மால் முடிந்த சிறு உதவி!//

விழலுக்கிறைத்த நீர்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நானும் இந்த விழாவிற்கு வந்திருந்தேன்.500பேர் இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு பேர் வந்ததே ஆச்சர்யத்தை அளிக்கிறது.இது போன்ற விழாக்களை சனிக்கிழமைகளில் நடத்துவதே சிறந்தது.

yathavan64@gmail.com said...



வணக்கம் வலைப் பூ நண்பரே!
எனது (புதுவைவேலு), "கவி ஒளியை" YOU TUBE ல் ஓளி ஏற்றி, ஒலிக்கச் செய்த
'சுப்பு தாத்தா' அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!
பாடலை கேட்டு மகிழ வாருங்கள்.

இணைப்பு:

http://youtu.be/KBsMu1m2xaE

.www.subbuthatha72.blogspot.com