Dec 14, 2015

வானவில் – என் பொண்ணு சொன்ன குட்டிக் கதை!


நான்காவது படிக்கும் என் பொண்ணு, எப்பொழுதாவது கதை சொல்வாள். நான் சொல்லும் “மொக்கை’ கதைகளை விட உயிர்ப்பாக இருக்கும்.
****

ஒரு நாள் காலை. ஒரு குடிசை வீட்டிலிருந்து இருந்து ஒரு பொண்ணு தூங்கி எழுந்தாள். வெளியே வந்து பார்த்தால், ஒரு அழகான வானவில்.
அப்பொழுது பூமியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அங்குமிங்கும் பதட்டத்துடன் ஓடினாங்க. பலர் செத்துப்போனார்கள்.

வானவில் இதைப் பார்த்து மிகவும் கவலை கொண்டது! தன்னை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, இறந்து போன அனைவருக்கும் உயிர்கொடுத்தது!

மக்கள் அனைவரும் தங்களுக்காக தன் உயிரை தந்த வானவில்லுக்கு நன்றி தெரிவித்தார்கள். இனிமேல் வானவில்லை பார்க்கமுடியாதேன்னு வருத்தப்பட்டாங்க!

திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தாள். எல்லாம் கனவென்று அறிந்தாள். வெளியே வந்து பார்த்தாள். அழகான வானவில் ஒன்று அவளைப் பார்த்து சிரித்தது!

No comments: