Feb 19, 2016

போஸ்டர்களை தின்னும் போலீசு!



பிப். 19 2009 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்தது. இன்றைக்கு வரைக்கும் நீதி கிடைக்கவில்லை.

இன்று விடிகாலை 4 மணியளவில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் உயர்நீதி மன்ற பகுதியை சுற்றி கண்டன சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எப்படியோ மோப்பம் பிடித்து வந்த பூக்கடை காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் சுவரொட்டியை ஒவ்வொன்றாக கிழித்துக்கொண்டிருந்தார். தூரத்திலிருந்து கவனித்த தோழர்கள், அருகில் சென்று "ஏன் கிழிக்கிறீர்கள்?" என்றதற்கு, 'சினிமா போஸ்டரை கிழிக்கிறோம்" என பம்மி பதில் சொன்னது. "கண்ணு தெரியலையா? படிக்க தெரியாதா?" என எகிறியதும் போலீசு பின்வாங்கியது.


வழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து போராடும் பொழுது தான் 2009 தாக்குதலுக்கு நீதி கிடைக்கும். சுவரொட்டியின் மீது கைவைக்க‌ பயமும் வரும்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

 

No comments: