May 27, 2007

பால் வெள்ளைக் காகிதம் - குட்டிக்கதை

காலைப் பனிப்போல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவனாக்கும்' என்று அலட்டிக்கொண்டது.

'நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன். காலம் முழுவதும், நான் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாக்கினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கமாட்டேன், தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது'.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும், கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்.

- கலீல் ஜிப்ரான் - மிட்டாய் கதைகளிலிருந்து

1 comment:

குருத்து said...

நல்ல உருவகக் கதை.

கலீல் ஜிப்ரான் (அ) கலீல் கிப்ரான் என்கிறார்கள்.

எனக்கு பிடித்த கவிஞர். கற்பனை குதிரையை தட்டிவிட்டால்... என்று சொல்வார்களே! கலீலின் சில கவிதைகளை படிக்கும்பொழுது எனக்கு தோன்றும்.

1883-ல் லெபனானில் பிறந்தவர். பிறகு, அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்து, தன்னுடைய 48 வயதில், 1931ல் நியூயார்க்கில் இறந்து போயிருக்கிறார்.

அவருடைய அரசியல் வாழ்வைப் பற்றி, தெரியவில்லை.