Jul 2, 2015

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறை!

மெட்ரொ ரயில் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிந்துவிட்டன. “ஆத்தா’ ஜெயிலிருந்து வெளியே வந்து திறக்கும்வரை மக்கள் காக்கவேண்டியதாகிவிட்டது. இல்லையென்றால், ”மெட்ரோ ரயிலை ஓடவிடு” என ’மம்மி’ முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆட்சியிலே மக்கள் பெரும் போராட்டமே செய்யவேண்டிதிருக்கும்!

ஒருவழியாக மெட்ரோ ரயில் கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரைக்கும் ஓட ஆரம்பித்துவிட்டது. பயணக் கட்டணத்தை கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது. 10 கி.மீக்கு ரூ. 40 கட்டணமாம். குறைந்தபட்ச கட்டணம் ரூ.10யாம். தலைநகர் தில்லியில் கூட இவ்வளவு கட்டணம் இல்லை. இந்த ஆட்சி பெரும்பான்மை மக்களை எல்லாம் மக்களாகவே மதிப்பதேயில்லை. நடைமுறையில் காசு இருப்பவனுக்கு ’தரமான’ கல்வி! என அமுல்படுத்துவதை போல காசு இருப்பவனுக்கு மெட்ரோ ரயில்! என புதிய மனுநீதியை அமுல்படுத்துகிறது!

மக்கள் நல அரசு என்றால் மெட்ரோ ரயிலை சேவையாக பார்க்கும். மக்கள் விரோத அரசு என்பதால், கல்லாவை நிரப்ப பார்க்கும் ஒரு முதலாளியை போல அரசு சிந்திக்கிறது. அதனால் தான், உலகின் பெரிய இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்க மத்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. அதை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் போராடிவருகிறார்கள்.

ஓட்டுக்கட்சி தலைவர்கள் எல்லாம் நீண்ட அறிக்கை விடுப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாக நினைத்துக்கொள்கிறார்கள். தங்களிடம் இருக்கும் “கோடிக்கணக்கான” அணிகளை கொண்டு போராட மறுப்பதேன்?

மக்களாகிய நாம் போராடுவதின் மூலம் தான் ரயில் சேவையை மக்கள் சேவையாக மாற்றமுடியும்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
90946 66320

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் நல்லதொரு வழி பிறக்கட்டும்...