Jul 26, 2015

காலாவதியாகிப்போன நீதித்துறையும், புதிய நீதிமுறை அமைப்பும்!



கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் சிந்தனூர் நகரில் உள்ள சிவில் கோர்ட்டில் கல்வி நிறுவன வழக்கு விசாரணைக்கு வந்தது. ” நீதியைவிரும்பிய படி வழங்க, மூத்த நீதிபதி சரணப்பா சஜ்ஜன்  சம்பந்தபட்டவரிடம் 5 லட்சம் பேரம் பேசி, இறுதியில் ஒரு லட்சமாவது வேண்டும் எனகறாராககூறிவிட்டார்.

லஞ்சத்தை தர விரும்பாமல், லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் தெரிவிக்க,   பணத்தை தரும் பொழுது கையும் களவுமாக நீதிபதி பிடிப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் பதவியை ராஜினாமா செய்தவர், பிறகு தலைமறைவாகிவிட்டார்நேற்று அவரை சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். இப்பொழுது 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுரங்க ஊழலில் சிறையில் இருந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியிடம் நீதிபதி ரூ. 13 கோடி லஞ்சம் வாங்கி கொண்டு ஜாமீன் வழங்க, விசாரித்து லஞ்சம் வாஞ்கியது உறுதியானதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கைதும் செய்யப்பட்டார். நீதிபதி மகன் வங்கி கணக்கில் 4 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி லாக்கரில் 1.5 கோடி வரையும் இருந்தது! இதெல்லாம் ஜூன் 2012ல் நடைபெற்றது!

இப்படி நீதியை 'பெறுவது' என்பது மாவட்ட நீதிமன்றம் துவங்கி உச்சநீதி மன்றம் வரை  இப்படி வழக்கமாகவே நடைபெற்றாலும், எப்பொழுதாவது தான் நீதிபதிகள் மாட்டுகிறார்கள். நீதித்துறையின் மீது நம்பிக்கைப் போய் மக்களுக்கு பலகாலம் ஆகிவிட்டது! புதிய நீதிமுறை அமைப்பு குறித்தும் சிந்திக்க வேண்டிய முறையில் இப்பொழுது இருக்கிறோம்!

No comments: