Jul 15, 2015

புதிய வண்டியும் பழைய பேரனும்!

பரபரப்பான காலை 8.30 மணி. பள்ளியில் விடுவதற்காக ஒரு பெரியவர் தன் பேரனை வண்டியில் அழைத்து வந்தார். ஒரு சிறு பள்ளம். மெதுவாக தான் வந்தார். இருப்பினும் வளைவு என்பதால், நிதானிக்கமுடியவில்லை. வண்டியோடு சாய்ந்தார்கள்.
பின்னாடி போய்க்கொண்டிருந்த நான், வண்டியை நிறுத்திவிட்டு, பேரனை அவசரமாய் தூக்கினேன்.

பெரியவர் மிகவும் பதட்டமாகி வண்டியை நிமிர்த்தி வைத்து, வண்டிக்கு ஏதும் சேதமாகி இருக்கிறதா என முழுவதும் சோதித்தார். ஏதுமில்லை. நிம்மதியானார். பிறகு, பேரனை வந்து பார்த்தார். கையில் சின்ன சிராய்ப்பு.

அப்பொழுது தான் கவனித்தேன். வண்டி புத்தம் புதுசு! பேரன் பழையவன் தானே! :)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அது சரி, பாசம் அப்படி...!

Anonymous said...

புது வண்டியும் பழைய பேரான்டியும்

Anonymous said...

புது வண்டியும் பழைய பேரான்டியும்