Jul 31, 2015

சசிபெருமாள் அய்யா மரணம்! டாஸ்மாக்கை மூடும் அவரின் கனவை நனவாக்குவோம்


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை அருகே, மக்கள் கோவில், பள்ளி அருகே அரசின் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தொடர்போராட்டம் நடத்தி வந்தனர். போராடும் மக்களோடு அய்யா சசி பெருமாள் துணை நின்றார்.

கடைகளை மூடும் மக்கள் கோரிக்கையை மதிக்காத அரசை கண்டித்து, இன்று காலையில் 200 அடி செல்போன் டவரில் ஏறி 4 மணி நேரம் போராடினார். இதனால் உடல்நலம் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனை போகிற வழியிலேயே இறந்தார் என செய்தி அறிந்தோம்.

தன் வாழ்நாள் முழுவதும் டாஸ்மாக் கடையை முற்றிலும் மூடவேண்டும் என உறுதியாக போராடிய அய்யா சசிபெருமாளின் போராட்ட குணத்தை வரித்துக்கொள்வோம்!

மக்களை திரட்டி, தொடர் போராட்டங்களை நடத்தி, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடி, அய்யா சசிபெருமாள் அவர்களின் கனவை நனவாக்குவோம்!



1 comment:

வலிப்போக்கன் said...

தன் வாழ்நாள் முழுவதும் டாஸ்மாக் கடையை முற்றிலும் மூடவேண்டும் என உறுதியாக போராடிய அய்யா சசிபெருமாளின் போராட்ட குணத்தை வரித்துக்கொள்வோம்!