Sep 27, 2015

நீதித்துறையில் ஊழல் இல்லவே இல்லை!

இன்று 27/09/2015 திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ‍ புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கூட்ட நிகழ்வில்....

 "வழக்கறிஞர்கள் குற்றமே இழைக்காதவர்கள் என்று நாம் ஒரு போதும் சொல்லவில்லை. குற்றமிழைப்பவர்கள் யாராயிருந்தாலும் விசாரிக்கப்படவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ஆனால் கடந்த 67 ஆண்டுகளில் எந்த உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டதில்லை. இவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால், வெளிப்படையாக துணிச்சலாக ஊழல் குற்றம் முதல் பாலியல் குற்றம் வரை அனைத்தையும் செய்கிறார்கள். தட்டிக் கேட்டால், குற்றமிழைக்கும் நீதிபதிகளே, நீதிமன்ற அவமதிப்பு என்று நம்மை மிரட்டுகிறார்கள்."

 அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம்,
தமிழநாடு

No comments: