May 5, 2016

களம் – ஒரு பார்வை!


சமீபத்திய கடுப்பேத்தும் ’பேய்’ படங்களின் வரிசையில் கடுப்பேற்றாத படம். ரியல் எஸ்டேட் தாதா ஒரு வீட்டை வளைத்துப் போட்டு, தன் மகனுக்கு பரிசாக தருகிறார். அந்த வீட்டில் சில அமானுஷ்ய செயல்கள் தொடர்ந்து பயமுறுத்துகின்றன. அதற்கான காரணத்தை சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கலை என 'மாயா' படத்திற்குரிய அத்தனை நேர்த்திகளும் இந்த படத்தில் இருந்தாலும், திரைக்கதை நொண்டியடிக்கிறது. அமானுஷ்ய செயல்களுக்கு அடிப்படையான அந்த பிளாஷ்பேக் காட்சி அறிவுபூர்வமாக சொல்ல முயன்றதை இன்னும் அழுத்தமாய், உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும். அதனாலேயே சப்பென்று படம் முடிந்துவிடுகிறது.

இயக்குநரே கதை, திரைக்கதை, வசனம் எழுதும் நெருக்கடியை பாக்யராஜ் துவங்கி வைத்தார். சமீபத்திய படங்கள் அதை கொஞ்சம் மாற்ற முயல்கின்றன. அதற்கு இந்த படமும் உதாரணம். நல்ல முன்னேற்றம் தான்!

No comments: