Aug 9, 2015

ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது PRPC சென்னைக் கிளை!



நேற்று தான் கிளை துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் ஆறு ஆண்டுகளை கடந்து வந்துவிட்டோம்!

உழைக்கும் மக்கள் உரிமைகளுக்கான தொடர்போராட்டத்தில்…
அடிப்படை உரிமைக்களுக்கான பகுதி வாழ் மக்களுடன் இணைந்து நின்ற போராட்டங்கள்!

சமச்சீர் கல்வி, இலவச கல்வி, அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள்!
மனித உரிமை மீறல்களை கண்டித்த போராட்டங்கள்!
உச்சநீதி மன்றம் வரை சென்று நடத்திய பல பொது நலவழக்குகள்!

- என கடந்து வந்த போராட்ட பாதையை நினைத்துப் பார்க்கும் பொழுது, சந்தோசமாக உணர்கிறோம்.

இந்த போராட்ட பயணத்தில் எங்களுக்கு பல உதவிகள் செய்த மூத்த வழக்குரைஞர்கள், சக வழக்குரைஞர்கள், நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள், தோழர்கள் என பலரையும் நன்றிகளுடன் நினைத்து பார்க்கிறோம்.

உலகமயமாக்க சூழலில் சமூகத்தில் மனித உரிமை மீறல்கள் மலிந்து வரும் வேளையில், நாம் செய்யவேண்டிய பணிகள் விரிவடைந்து கொண்டே வருகின்றன. சமூக அநீதிகளை எதிர்த்து போராடும் மக்களை காக்க இப்பொழுது செயல்படுவதை விட, இன்னும் உற்சாகமாகவும், உறுதியாகவும் இயங்க இந்நாளில் உறுதியேற்கிறோம்.

எங்களுடன் இணைந்து போராட உங்களையும் உரிமையுடன் அழைக்கிறோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

1 comment:

Avargal Unmaigal said...


ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களின் PRPC சென்னைக் கிளைக்கு எனது பாராட்டுகள் உங்கள் முயற்சிகள் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்