Oct 18, 2015

ஊழல் நீதிபதிகளை பாராளுமன்றம் மூலம் தண்டிப்பது சாத்தியமா?

கடந்த 65 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல், அதிகார மீறல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் மிகவும் கேவலமாக நடந்து, குற்றம் நிரூபணமாகிய கீழமை நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நிலை என்ன? என்றாவது ஒரு நீதிபதி மீது லஞ்சம்-ஊழல் குற்றத்திற்கு வழக்கு, விசாரணை நடந்ததுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் யோக்கியர்களா?

மக்களுக்கு எதிராக தயங்காமல் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு சட்ட பாதுகாப்பு எதற்கு? குற்றவாளி என்று தெரிந்தாலும் பாராளுமன்றம் மூலம் மட்டுமே நீதிபதிகளை நீக்க முடியும். ஊழல் பாராளுமன்றம் மூலம் இது சாத்தியமா?

அரசியல்வாதிகளாவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களுக்கு கூழைகும்பிடு போட வேண்டும். நீதிபதிகள்-அதிகாரிகளுக்கு அதவும் இல்லை. நீதிபதிகள் மக்களுக்கு பொறுப்புடையவர்களாக ஆக்கப்பட வேண்டும். நீதிபதிகள் தங்களின் குற்றங்களுக்கு தண்டிக்கப்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்குத்தான் வழக்கறிஞர் போராட்டம்.

 - அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு

No comments: